ஏவுகணை - EAVUKANAI

Thursday, September 23, 2010

காமன் வெல்த்தா? கல்மாடி வெல்த்தா?

               பசித்த வயிறுகள் கூழுக்கு ஏங்கி நிற்கையில் படாடோப அரசியல்வாதிகள் வாண வேடிக்கை நடத்துகிறார்கள். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், தீவிரவாதம், ஊழல் இவை போட்டியே இல்லாமல் வெற்றிக் கம்பத்தை நிரந்தரமாகப் பற்றிக் கொண்டு கும்மாளம் போடும்போது காமன்வெல்த் போட்டிகள் என்ற வாணவேடிக்கையை ஆரம்பித்து உலக நாடுகள் மத்தியில் கரிபூசிக் கொண்டு நிற்கிறது இந்தியா. விலைவாசி உயர்வுபற்றி கேள்வி கேட்டால் "வெயிட் அண்ட் சீ" என்று இந்திய கோவணாண்டிகளுக்கு 'இண்டலட்சு'வல் பதில் கொடுத்த சிதம்பரங்களும் மன்மோகன்களும் உலகநாடுகள் முன்னால் சாயம் வெளுத்துப்போய் பல்லிளிக்கிறார்கள்.
                                                         இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் சுகாதார ஏற்பாடுகள் சரியில்லை என்றும் கூறி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, கனடா, நியுஸிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்தியா வர தயக்கம் காட்டியிருக்கிறார்கள். இது தொடர்பான இந்தியாவின் விளக்கம் நம்பத்தகுந்ததல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.




                         அவர்கள் சந்தேகம் சரியானது என்பதற்கு ஆதாரமாக ஸ்டேடியத்தில் கட்டப்பட்ட நடைமேடையும், தற்காலிகக் கூரையும் அடுத்தடுத்து இடிந்துவிழுந்து இந்தியத் தரப்பை கோமாளிகளாக வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது. இனி T.V யிலும் பத்திரிக்கையிலும் இவர்கள் அளக்கும் பொய்யை வெளிநாட்டில் இருக்கும் நாய்கூட நம்பப்போவதில்லை. ஆனால் நமது தலையெழுத்து இவர்களை நமது தலைவர்களாக ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
                       காமன்வெல்த் என்பதை கல்மாடி வெல்த் என்று சுரேஷ் கல்மாடி தவறாகப் புரிந்து கொண்டதுதான் இந்த தலைகுனிவுக்குக் காரணம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் ஊழல் என்று எத்தனை கூக்குரல் ஒலித்தாலும், ஊழல் முடை நாற்றத்தில் இந்தியாவே மூழ்கினாலும், வெளிநாடுகளில் இருந்து எத்தனை செருப்படி விழுந்தாலும் ஊழல் பெருச்சாளிகளுக்கும் அவர்களுக்கு சப்பைக்கட்டு கட்டும் அரசியல் விபச்சாரிகளுக்கும் வெட்கம், மானம், ரோஷம் எதுவும் வரபோவதில்லை. இவை எல்லாவற்றையும் தலைமுழுகிவிட்டுத்தான் இவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
                                          அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
                                            ஆனால் மக்களுக்கு?

No comments:

Post a Comment

Site Meter